|
1997 - 2007 |
Mrs.அப்துல் சலாம் |
|
குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலத்தின் முதல் பெண் அதிபர். |
|
2007 - 2010 |
Mr.AS.ஜுனைதீன் |
|
திருமதி அப்துல் சலாம் அதிபர் அவர்களை தொடர்ந்து மூன்று வருடங்கள் குறிஞ்சாக்கேணி மகளிர் மஹா வித்தியாலயத்தில் கடமையாற்றினார். இவர் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் இணைபாடவிதான செயல்பாட்டிலும் மிகுந்த ஆர்வம் காட்டியவர். |
|
20210 - 2010 |
Mr.AM.முலூஃபர் |
|
குறிஞ்சாக்கேணி மகளிர் மஹா வித்தியாலயத்தில் 3 மாதங்கள் கடமையாற்றினார். எனினும் பாடசாலையின் வளர்ச்சியில் இவரது பங்கு அளப்பெரியது. |
|
2010 - 2016 |
Mr.VM.மூமீன் |
|
இவரின் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் ஆர்வமும் ஆற்றலும் ஆளுமையும் அர்ப்பணிப்பும் பாடசாலையை பல சாதனைகளைகளுக்கு இட்டு சென்றது. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு அகில இலங்கை குர் ஆன் மனன போட்டியில் செல்வி நசுருல்லாகான் பாத்திமா சம்கா என்ற மாணவி முதலாம் இடம் பெற்று பெருமை சேர்த்தார் சாதாரண பரீட்சை மற்றும் உயர்தர பரிட்சையில் மாணவர்கள் சித்தி எய்து சாதனை படைப்பதற்கு காரணமாக இருந்தார். |
|
2016 - 2016 |
Mr.AS.மஹில் |
|
குறிஞ்சாக்கேணி மகளிர் மஹா வித்தியாலயத்தில் 6 மாதங்கள் கடமையாற்றினார். எனினும் பாடசாலையின் வளர்ச்சியிலும் மாணவர்களின் அடைவு மட்டத்திலும் இவரது பங்கு அளப்பெரியது. |
|
2016 - 2023 |
Mr.ST.நஜீம் |
|
இப்பாடசாலையில் கடமை புரிந்த சிறந்த ஒரு நிர்வாகி ஆவார். இவர் கடமை ஏற்ற அவ்வாண்டே கலை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியவர் மிகுந்த ஆர்வமும் ஆற்றலும் தொழில்நுட்பவியல் அறிவும் சிறந்த மனப்பாங்கும் கொண்டு விளங்கியவர். பாடசாலையின் ஒவ்வொரு ஆண்டிலும் மாணவர்களின் கல்விச் சாதனைகளிலும் போட்டி நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டி பாடசாலையின் நிர்வாகத்திலும், ஆசிரியர்களிடத்திலும், சமூகத்திலும் சிறந்த நன்மதிப்பைப் பெற்ற அதிபர் ஆவார். |
|
2023 - இன்று வரை |
MT.ஹினாயதுள்ளாஹ் |
|






